சிதம்பரம் அருகே சிறுவனை விழுங்கியது முதலை
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை, முதலை ஒன்று கடித்து விழுங்கியது.
சிதம்பரம் அருகே கீழவன்னியூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் பாலசுந்தர் (8).
குமராட்சி-வன்னியூர் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றில், தன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான் பாலசுந்தர்.
அப்போது, 8 அடி நீளமுள்ள ஒரு முதலை, பாலசுந்தரின் காலைக் கவ்வி இழுத்தது. பின் அவனை அப்படியேஉயிரோடு அந்த முதலை விழுங்கிவிட்டது.
இதைப் பார்த்த சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதுபற்றித் தகவல் அறிந்ததும், சிதம்பரம் தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து அப்பகுதிக்குச்சென்றனர்.
பாலசுந்தரை விழுங்கிய அந்த முதலையைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications