For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

72 மணி நேர கெடு: தலிபான்களிடம் பாக். கெஞ்சல்

By Staff
Google Oneindia Tamil News

காண்டஹார்:

72 மணி நேரத்துக்குள் பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுமாறு ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் கோரிவருகிறது.

பின் லேடனை 72 மணி நேரத்தில் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா தலிபான்களுக்கு நிபந்தனைவிதித்துள்ளது. இந்த நிபந்தனை குறித்து தலிபான்களுடன பேச்சு நடத்துமாறு பாகிஸ்தானுக்கும் உத்தரவிட்டது. இதன் மூலம்ஆப்தானிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பலாம், பாகிஸ்தானும் பிரச்சனையில் இருந்து தப்பலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இதையடுத்து தலிபான்களின் முக்கிய ராணுவத் தலைமையகமான காண்டகார் வந்திறங்கியுள்ள பாகிஸ்தான் தூதுக்குழுஉடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

பின் லேடனை ஒப்படைத்துவிடுமாறு அமெரிக்கா கூறி அனுப்பியுள்ள செய்தியை அவர்கள் தலிபான்களிடம் தெரிவித்தனர்.ஆனால், பதிலுக்கு தலிபான்கள் பாகிஸ்தானை திட்டத் தீர்த்தாக செய்திகள் வருகின்றன.

வல்லரசுக்குப் பணிந்து இஸ்லாமிய போராளிகளை பாகிஸ்தான் கை கழுவி விட்டுவிட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கு உதவ வேண்டிய தங்களது இக்கட்டான நிலையை விளக்கி வரும் பாகிஸ்தான் தூதுக்குழுவினர், எக் காரணம்கொண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் எனவும் தலிபான்களிடம் கோரி வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு யார் உதவினாலும் அவர்களையும் தாக்குவோம் என தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த மிரட்டல்தங்களுக்குத் தான் விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கருதுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறுகையில், அவர்களுக்கு நாங்கள் மிக நல்லநண்பர்களாக இருந்து எல்லா உதவிகளையும் வழங்கி வந்தோம். இப்போது எங்களையே தாக்குவதாக தலிபான்கள் கூறியுள்ளதுமிகுந்த வருத்தமளிக்கிறது. இது குறித்து இப்போது ஆப்கானிஸ்தான் உள்ள பாகிஸ்தான் குழு தலிபான்களுடன் விவாதித்துவருகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X