பாகிஸ்தானில் அமெரிக்க கொடிகள் எரிப்பு
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தானுக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்கஎதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு உதவினால் சொந்த நாட்டையே எதிர்த்து தலிபான்களுடன் சேர்ந்து போராடுவோம் என பலஇஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.
தலிபான்களை உருவாக்கியதே பாகிஸ்தானில் உள்ள மதப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் மதபோதனை வழங்கப்பட்டு ஐ.எஸ்.ஐயால் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள் தான் பின்னர் தலிபான்அமைப்பை உருவாக்கி ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர்.
வடகிழக்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களிடையே பேசியபாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான அப்துல் அகத் கூறுகையில், ஆப்கானிஸ்தானைத் தாக்கினால்அமெரிக்காவுக்கு எதிரான போரில் நாங்களும் இறங்குவோம் என்றார்.
பாகிஸ்தானின் பங்குச் சந்தையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனது கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத்பங்குச் சந்தைகளை 3 இன்று முதல் நாட்களுக்கு மூடிவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications