For Daily Alerts
Just In
கர்நாடகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர் அமெரிக்காவில் கைது
பெங்களூர்:
நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட 50 பேரில், கர்நாடகத்திலிருந்து பாஸ்போர்ட் பெற்று அமெரிக்கா சென்ற அயூப் அலிகான்என்பவரும் ஒருவர்.
அலிகான் தவிர, உத்தரப் பிரதேசத்தில் பாஸ்போர்ட் பெற்ற முகம்மது அஸ்மத், மும்பையில் பாஸ்போர்ட் பெற்றமுகம்மது அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பற்றி மேலும் தகவல் அறியுமாறு மத்திய அரசை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடகப் போலீசாரும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
அயூப் அலிகான், தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புள்ளவரா என்பது பற்றி கர்நாடக அரசு புலன் விசாரணைநடத்தி வருகிறது.
Comments
Story first published: Monday, September 17, 2001, 5:30 [IST]