ஆப்கான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவக் குழுவினர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வந்திறங்கியுள்ள 50 அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள விமானத் தளங்களில் நிலைகொண்டுள்ளனர்.
இந்த இரு விமானத் தலங்களும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளன.
வியாழக்கிழமை நள்ளிரவில் இஸ்லாமாபாத் விமான நிலையம் திடீரென மூடப்பட்டது. அப்போது எந்த பயணிகள விமானமும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் தான் இந்த 50 பேரும் ரகசியமாக பாகிஸ்தான் வந்திறங்கினர்.
ஆப்கானிஸ்தானுக்குள் எப்படி நுழையலாம், எந்த வழியாகத் தாக்கலாம் என்பது குறித்த ஆய்வுகளில் இந்தப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications