For Quick Alerts
For Daily Alerts
Just In
ஊட்டி மலை ரயில் பாதையில் குண்டு... 4 பேர் கைது
ஊட்டி:
ஊட்டி மலை ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரயில் பாதையில் வெடிகுண்டுகள் வைத்தவர்கள் யார் என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் விளைவாக நான்கு பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. இவர்கள்தான் ரயில் பாதையில்வெடிகுண்டு வைத்தவர்கள். இவர்களது கும்பலைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற நபர் தலைமறைவாக உள்ளார்.அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு பேடமிருந்து தீவிரவாத வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள், பேனர்கள், ஒரு நாட்டுவெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தமிழ்த் தீவிரவாதிகளாக இருக்கும் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Monday, September 17, 2001, 5:30 [IST]