For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சு தோல்வி: மீண்டும் பேச திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

காண்டஹார்:

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வைக்கும் பாகிஸ்தானின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முயற்சிதோல்வியடைந்துள்ளது.

இது தொடர்பாக தலிபான் தீவிரவாத ஆட்சியாளர்களின் தலைவர் முல்லா முகம்மத் ஒமருடன் பாகிஸ்தானின்உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மெஹ்மூத் அகமத் காண்டஹாரில் நடத்தியபேச்சுவார்த்தை முதல் கட்டமாக தோல்வியடைந்துள்ளது.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஆப்கானிஸ்தானை பாதுகாத்துக் கொள்ளுமாறுபாகிஸ்தானியர்கள் எடுத்துக் கூறியதை தலிபான்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து பெரிய அளவில் பேசவில்லை, பிற பிரச்சனைகள்குறித்துத் தான் பேசினோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பின் லேடனை ஒப்படைப்பது குறித்து பேசவே ஆப்கானிஸ்தான் தலைவர் மறுத்ததால், முதல் கட்ட பேச்சுவார்த்தைதோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால், மீண்டும் தலிபான்களுடன் பேசுவோம் என பாகிஸ்தான் தூதுக்குழுஅறிவித்துள்ளது.

இதையடுத்து இரண்டாவது கட்டமாக பாகிஸ்தான் குழு காபூலில் உள்ள தலிபான் ராணுவக் கமாண்டர்களுடனும்பின் லேடன் ஆதரவு மதத் தலைவர்களுடனும் பேசத் திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X