சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் பாக்.கிலிருந்து மலேசியாவுக்கு மாற்றம்
லண்டன்:
அமெரிக்காவில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து, பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த சர்வதேசகிரிக்கெட் கவுன்சிலின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம், மலேசியாவில் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன்தான் காரணம் என்றுமுடிவெடுத்த அமெரிக்கா, ஆப்கனைத் தாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தானின் உதவியையும்அமெரிக்கா நாடியுள்ளது.
பாகிஸ்தானின் அனுமதியுடன், பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தன் படைகளைக்குவித்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் அறிவித்து விட்டது.இதையடுத்து, லாகூரில் நடைபெறவேண்டிய இந்தக் கூட்டம், அதே தேதிகளில், மலேசியாவின் தலைநகர்கோலாலம்பூரில் நடைபெறும் என்று சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.