உள்ளாட்சித் தேர்தல்
இன்னொரு தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழகம். சட்டசபைத் தேர்தல் முடிந்து 5 மாதம் கூட முடியாத நிலையில் வந்துவிட்டது உள்ளாட்சித் தேர்தல்.கடந்த 4 மாதங்களில் அதிமுக ஆட்சியின் மீதான ஒரு கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தல் இருக்கப் போகிறது.
கருணாநிதியை ராத்திரியில் போலீஸை விட்டு அடித்து இழுத்துச் சென்றது, ஜெயலலிதா பதவி இழந்தது. இவை இரண்டும் தான் முக்கிய விவாதப்பொருள்களாக இருக்கப் போகின்றன.
திமுக, அதிமுக தவிர எல்லா கட்சிகளுமே தங்கள் நாடியைப் பிடித்துப் பார்க்க இந்தத் தேர்தல் உதவும். ஸ்டாலினை மீண்டும் மேயர் பதவிக்கு நிறுத்திவிட்டதுதிமுக.
சென்னை தவிர வேறு மாநகராட்சிகளில் நம்பிக்கையோடு களம் இறங்கியுள்ளது அதிமுக.
வழக்கம்போல் தேர்தலுக்கு முன் அணி மாறி தனது தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார் ராமதாஸ்.
மூப்பனார் இல்லாத த.மா.கா. ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
காங்கிரசுக்கு திடீர் வீரம் வந்துவிட்டது. குட்டி குட்டி கட்சிகளைத் திரட்டி தனி அணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ஜாதிக் கட்சிகளும் அங்காங்கே போட்டியிடுகின்றன.
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் அரசியலைவிட அடிப்படைப் பிரச்சனைகள் தான் முக்கியத்துவம் பெறும்.
கடந்த தேர்தலில் கவுன்சிலர் ஆனதில் சம்பாதித்து வீடு கட்டி செட்டில் ஆகிவிட்ட பலர் மீண்டும் உங்கள் வீட்டிக்கு வந்து பல் இளிப்பார்கள். நாங்கள்உங்கள் ஜாதி தான். ஓட்டுபோடுங்கள் என்பார்கள்.
இவர்களைப் புறக்கணித்துவிட்டு நீங்கள் சந்தித்து வரும் மழையில் கரைந்த ரோடுகள், வெயிலில் வெடித்த ரோடுகள், நிரம்பி வழியும் சாக்கடைகள்,தண்ணீரே பார்த்திராத குழாய்கள், குப்பை மேடுகள், தெருவில் திரியும் பன்றிகளை மனதில் நிறுத்திக் கொண்டு யோசித்து ஓட்டுபோட்டால் விடிவு வரவாய்ப்புண்டு.
இப்போது தமிழகத்தின் 5 மாநகராட்சிகளில் ஒரு ரவுண்ட் போகலாமா?












Click it and Unblock the Notifications