For Daily Alerts
Just In
கும்பகோணம்: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி தந்தை, 2 குழந்தைகள் பலி
கும்பகோணம்:
ஸகூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் தந்தையும் 2 குழந்தைகளும் பலியானார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது குழந்தைகள் 2 பேரையும் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் அவர்களின் தந்தை.
அப்போது எதிரே வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ், ஸ்கூட்டர்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த தந்தை மற்றும் அவரது 2 குழந்தைகளும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துஇறந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Story first published: Friday, October 5, 2001, 5:30 [IST]