காஷ்மீர் தாக்குதல் - ஜெர்மனி கடும் கண்டனம்
பெர்லின்:
காஷ்மீர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் நடத்தியதாக்குதலை ஜெர்மனி வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த தாக்குதலை ஜெர்மனி வன்மையாக கண்டித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பல வெளிநாடுகளுக்கும் பயணம்மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜெர்மனி அதிபர்ஸ்ரேடரை சந்தித்து பேசினார்.
அப்போது காஷ்மீர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைஜெர்மனி வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதிகள் அமெரிக்கா மீது நடத்தியதாக்குதலையும், ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மீது நடத்திய தாக்குதலையும்ஜெர்மனி ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறது என்று ஜெர்மன் அதிபர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம்கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் பதவி ஏற்றபின் நிலவி வரும் சூழ்நிலைகுறித்தும் விவாதித்தார்கள்.
பிரதமர் வாஜ்பாய் ஜெர்மன் அதிபரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஜெர்மன் அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் வாஜ்பாயைசந்திக்கும் நாளை தான் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் ஜெர்மன் அதிபர்கூறினார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஜஸ்வந்த் கூறுகையில், இந்தியா கடந்த 20ஆண்டுகாலமாக தீவிரவாதத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது. தீவிரவாத்தைஒழிப்பதில் பாகுபாடு இருக்கக்கூடாது.
ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்வேண்டுமென்றே, இந்தியாவை கோபமூட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல். இதுஇந்தியாவின் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
அமெரிக்க நகரங்கள் மீது நடத்தப்பட் தாக்குதலுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மீதுஎடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.