For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிபோதையில் கார்டு... தாமதமானது ரயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயிலில் குடிபோதையில்மயங்கி கிடந்த கார்டு இறக்கிவிடப்பட்டுவேறு கார்டுடன் ரயில் பயணத்தை தொடர்ந்ததது.

புதன்கிழமை மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயிலில் காலி சரக்குபெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

இந்த ரயிலின் கார்டாக கிருஷ்ணபிரசாத் என்பவர் இருந்தார். சரக்கு ரயில் வழியில் வரும் எந்த ஸ்டேஷனிலும்நிற்காது என்றாலும், ஒவ்வொரு ஸ்டேஷன் வரும் போதும் எஞ்ஜின் டிரைவருக்கு பச்சை சிக்னல் காட்டவேண்டியது கார்டின் கடைமை.

ரயில் கிளம்பிய சிறிது நேரம் கழித்து வந்த சில ஸ்டேஷன்களில் சிக்னல் காட்டிய கிருஷ்ணபிரசாத், பின் சிக்னல்எதையும் காட்டவில்லை. ரயில் டிரைவரும் கார்டின் சிக்னல் இல்லாமல் ஜோலார்பேட்டை வரை ரயிலை ஓட்டிவந்துவிட்டார்.

கார்டு ஏன் சிக்னல் காட்டவில்லை என்ற சந்தேகப்பட்ட டிரைவர் ஜோலார்பேட்டையில் ரயிலை நிறுத்திவிட்டு கார்டுஇருக்கும் பெட்டியை சென்று பார்த்தார். அங்கு கார்டு குடிபோதையில் மயங்கி கிடப்பதை பார்த்து, இனிமேலும்இவருடன் ரயிலை ஓட்ட முடியாது என்று உணர்ந்த டிரைவர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சரக்கு ரயில் நிற்கும் இடத்திற்கு வந்து குடிபோதையில் மயங்கி கிடந்தகிருஷ்ணபிரசாத்தை எழுப்பினர். கிருஷ்ண பிரசாத் கண்விழித்து பார்த்து குடி மயக்கத்திலேயே அதிகாரிகளுக்குவணக்கம் தெரிவித்தார்.

அவரின் நிலையே புரிந்து கொண்ட அதிகாரிகள் அவரை ஜோலார்பேட்டையிலேயே இறக்கிவிட்டனர். வேறு ஒருகார்டை நியமித்தனர். இதையடுத்து ரயில் தன் பயணத்தை தொடர்ந்தது.

இதனால் 2 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது அந்த சரக்கு ரயில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X