For Daily Alerts
Just In
திண்டிவனம் எம்.பியின் வெற்றி செல்லும் - உயர் நீதிமன்றம்
சென்னை:
திண்டிவனம் எம்.பி. தேர்தலில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த எம்.பி. தேர்தலின்போது, ராமச்சந்திரனை எதிர்த்துப் போட்டியிட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தேர்தலில்முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன், "முறைகேடுகள் தொடர்பான ஆதாரம் எதையும் ராமமூர்த்தி தாக்கல்செய்யவில்லை.
எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லும்" என்றுதீர்ப்பளித்தார்.
Comments
Story first published: Friday, October 5, 2001, 5:30 [IST]