வீரப்பன் வேட்டை: அந்தியூர் முகாமிற்கு அதிரடிப்படை வருகை
அந்தியூர்:
அந்தியூரில் முகாமிட்டு வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரைமத்திய அரசு அழைத்துக்கொண்டதை அடுத்து, வீரப்பனைத் தேடும் பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க அந்தியூர்காட்டுப் பகுதியில் தமிழக அதிரடைப் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணியில்ஈடுபட்டிருந்த அதிரடிப்படை வீரர்களில் 100 பேர் அந்தியூர் காட்டுப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று (வியாழக்கிழமை) துப்பாக்கிகள், மற்றும கூடாரங்களுடன் அந்தியூர்காட்டுப் பகுதிக்கு வந்திறங்கினர்.
இவர்கள் 10 பிரிவுககளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும 10 பேர் வீதம் தேடுதல் வேட்டையில்ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் மைசூர் நீதிமன்றம் கர்நாடக சிறைகளில் இருந்து 76 பேரை விடுதலை செய்தது. இவர்கள்அனைவரும் வீரப்பன் நடமாடும் கோவிந்தப்பாடி, பர்கூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யார்யாரைச் சந்திக்கிறார்கள் என்பது பற்றி உளவுப் படை தீவிரமாக கண்கானித்துவருகிறது.












Click it and Unblock the Notifications