தலிபான்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா
காபூல்:
பின் லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மறுத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவுகாபூல், காண்டஹார் மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்கள் மீது அமெரிக்கா தன்னுடைய தாக்குதலைத்தொடங்கியது.
பின் லேடனை ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நிச்சயம் என்று பல எச்சரிக்கைகளை அமெரிக்கா விடுத்தபோதிலும், தலிபான் அரசு அதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது.
பொறுத்துப் பார்த்த அமெரிக்கா, ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு (இந்திய நேரப்படி) தாக்குதலைத்தொடங்கியது.
தலிபான் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளில்தான் தங்களுடைய முதல் தாக்குதல்களைஆரம்பித்தன அமெரிக்க விமான மற்றும் கடற்படைகள்.
காபூல், காண்டஹார் மற்றும் ஜலாலாபாத் போன்ற ஆப்கன் நகரங்கள் மீது இதுவரை 50க்கும் மேற்பட்ட ஏவுகணைவீசித் தாக்கியுள்ளது அமெரிக்கா.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் காபூல் நகரத்தின் பல பகுதிகள் நாசமடைந்தன. காபூல் மற்றும் காண்டஹார்நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் பலத்த சேதமடைந்தன. விமான நிலையங்களில் உள்ள ரேடார்கள்முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
இதுவரை நடந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications