10 ஆண்டுகளில் 341 விஷச்சாராய சாவுகள்: டி.ஜி.பி.
சென்னை:
தமிழகத்தில் சென்ற 10 ஆண்டுகளில் மட்டும் 50 விஷச்சாராய சாவு சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் இதில் 341பேர் பலியாகியுள்ளனர் என்றும் தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அளித்த பேட்டியின் போது கூறியாதவது:
தமிழகத்தில் சென்ற 1991ம் ஆண்டு முதல் இன்றுவரை 10 ஆண்டுகளில் மொத்தம் 50 விஷச்சாராய சாவுசம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 341 பேர் இறந்து போயுள்ளனர்.
1998ம் ஆண்டு மட்டும் 7 விஷச்சாராய சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 69 பேர் உயிரிழந்தனர். 301 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 1999ம் ஆண்டில் 4 விஷச் சாராய சம்பவங்கள் நடந்தன. இவற்றில் 25 பேர்பலியானார்கள். 2000மாவது ஆண்டில் நடந்த 2 சம்பவங்களில் 16 பேர் பலியானார்கள்.
இந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்களில் இதுவரை 45 பேர் இறந்துள்ளனர்.
சென்ற மாதம் அம்பத்தூர், மேனாம்பட்டு கிராமத்தில் விஷச்சாராயக் குடித்து 13 பேர் இறந்து போனார்கள்.
தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் இதுவரை 36 பேர் இறந்துள்ளனர்.
சென்ற 10 ஆண்டுகளில் விஷச்சாராயம் குடித்து இறந்து போன 341 பேரில் 171 பேர் மெத்தனால் என்றவிஷத்தாலேயே இறந்துள்ளனர். மெத்தனால் மிகக் கொடிய விஷம் இதை சில துளிகள் சாப்பிட்டாலே சாவுநிச்சயம்.
மெத்தனால் என்பது சாராயமும் அல்ல. மெத்தனால் மருந்துகள் தயாரிக்க சில தொழிற்சாலைகளில்உபயோகிக்கப்படுகிறது. சில தொழிற்சாலைகளில் உலோகங்களை உருக்கவும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் மெத்தனாலை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் 120 உள்ளன. இந்த தொழிற்சாலைகளைவரைமுறைபடுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார் நெய்ல்வால்.












Click it and Unblock the Notifications