கணவரை அடித்துக் கொன்ற மனைவிகள்; உதவிய மகள்கள்
சென்னை:
சேலம் மாவட்டத்தில் 3 மனைவிகள் இருக்கும்போது நாலாவதாக திருமணம் செய்யமுயன்ற -நபரை அவரது இரண்டு மனைவிகள் சேர்ந்து கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் இளையபெருமாள். கூலித் தொழிலாளியாகஇருந்து வந்தார். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பவே, இளைய பெருமாள், சாவித்-ரி என்ற பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார்.
சாவித்-ரியின் தங்கை விமலா-வை விரும்பிய இளைய பெருமாள் சாவித்-ரியின்சம்மதத்துடன் விமலாவையும் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் -மூலம்மொத்தமாக 3 பெண்கள், 1 பையன் உள்ளார்கள்.
இத்தனை மனைவிகள் போதாது என்று இளையபெருமாளுக்கு அ-முதா என்றபெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை ஓமலூ-ரில் தனியாக வீடு பார்த்துகுடித்தனம் -நடத்தி வந்தார். இதையறிந்த சாவித்-ரியும், விமலாவும் ஆத்திரம்அடைந்தார்கள். 3 கல்யாணம் செய்து விட்டு இன்னும் ஒரு கல்யாணமாக என்றுஅவர்கள் பெருமாளிடம் சண்டை போட்டார்கள்.
ஆனால் அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதையடுத்துபெருமாளைக் கொல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 4ம் தேதி இளைய பெருமாள்வீட்டில் இருந்துபோது, அவரது மனைவிகள், மகள்கள், அவர்களது கணவன்கள்ஆகியோர் சேர்ந்து இரும்புத் தடியால் சரமா-ரியாக அடித்துக் கொன்றனர். பின்னர்அவரை தூக்கில் தொங்க விட்டனர்.
இந்த பயங்கர கொலை தொடர்பாக பெருமாளின் மகள் ராஜாமணி, சாவித்-ரி, விமலா,இன்னொரு மகள் காளியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இளையபெருமாளின் மருமகன்கள் ஆறு-முகம், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.