பல்லடம் அருகே காலரா பரவுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே காலரா நோய் பரவி வருவதால் அப்பகுதிகளுக்கு மருத்துவக் குழுவை மாவட்ட ஆட்சியர்முருகானந்தம் அனுப்பி வைத்துள்ளார்.
பல்லடம் அருகே உள்ள இரண்டு கிராமங்களில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருகிறது. இதையடுத்து அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பலர்மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை யாரும் காலராவுக்கு பலியாகவில்லை.
இந் நிலையில் அந்த கிராமங்களுக்கு டாக்டர்கள் குழுவை மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், கிராம மக்கள்குடிநீரைக் காய்ச்சிப் பருகுமாறும், கிணறுகளில் இருக்கும் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications