ஆப்கானிஸ்தான் எல்லையில் மருத்துவமனை திறந்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையை இந்தியா திறந்துள்ளது.
ஜஸ்வந்த் சிங் கூறினார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும். இதில் ஒரு பகுதியாகத் தான் மருத்துவமனையைஅமைத்துள்ளோம். இங்கு நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமின்றி அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறவும் வசதிகள் உள்ளன.
இது தவிர ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுளளது. ஆனால், அது எப்படிஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பப்படும் என்ற விவரம் தெரியவில்லை. ஏனெனில் இந்தியா-தலிபான் இடையே எந்த உறவும் இல்லை.
அமெரிக்க விமானங்கள் மூலம் இந்த நிவாரணப் பொருள்கள் ஆப்கானிஸ்தானுக்குள் போடப்படுமா அல்லது ஐக்கிய நாடுகள் சபைமூலமாக இந்த உதவி அனுப்பப்படுமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications