உள்ளாட்சித் தேர்தல்... வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மாநில தேர்தல்ஆணையர் பி.எஸ்.பாண்டியன் கூறியுள்ளார்.

திருச்சியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் புதன்கிழமைஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை யாராவது மீறிநடப்பதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் போதுமான பாதுகாப்புக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

பல இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் ஏலம் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.ஆனால் இதுவரை புகார் எதுவும் வரவில்லை. அப்படியே புகார்கள் வந்தாலும் கூட அதுகுறித்து சட்டப்படிநடவடிக்கை எடுக்க முடியாது.

அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் எதிர்காலத்தில் இதுபோன்றநிகழ்ச்சிகளைத் தடுக்க முடியும் என்றார் பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+