பிரதமர் மீது பன்னீர் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரி கர்நாடக முதல்வரைவலியுறுத்த பிரதமர் வாஜ்பாய் தவறி விட்டார் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
இன்று பிரதமர் தலைமையில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பன்னீர்செல்வம்கூறியதாவது:
காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் வாடும் பயிர்களை காக்க காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்துவிட்டார்.
பிரதமரும் கர்நாடக அரசிடம் எதுவும் வற்புறுத்தி கூறவில்லை. பயனற்ற, அதிகாரம் எதுவும் இல்லாத இந்தஆணைய கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications