சென்னையில் ஒரு சபாஷ் வேட்பாளர்!
சென்னை:
தேர்தல் பிரசாரம் செய்வது ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால் போன் செய்தும், நண்பர்களை அனுப்பியும்தனக்காக பிரசாரம் செய்து வருகிறார் சென்னை வேட்பாளர் ஒருவர்.
சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் சுபாஷ். இவர் தமிழ் நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டுவாரியத்தில் பணியாற்றியவர். தற்போது 155-வது வார்டில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரதிதற்காக இவர் ரொம்பக் கஷ்டப்படவில்லை. தனது நண்பர்களை அழைத்து தனக்காக தேர்தலில்பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இவரும் முடிந்தால் சில வீடுகளுக்குப் போய் ஓட்டுக் கேட்பார். மற்றபடி ஆட்டோவில் குழாயைக் கட்டிக் கொண்டுகொள்கை முழக்கமிடுவது, துண்டுப் பிரசுரங்கள் அடிப்பது, சுவர்களில் விளம்பரம் செய்வது என வழக்கமானஎந்தவிதமான பிரசார யுக்தியையும் அவர் கடைப்பிடிக்கவில்லை.
இதன் உச்சகட்டமாக வீட்டில் ஹாயாக அமர்ந்து கொண்டு தனது வார்டுக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் போன்செய்து, சார், எனக்கே ஓட்டு போடுங்க, மறக்காம ஓட்டுப் போடுங்க என போன் பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்திற்காக செலவு செய்தால் அதுவும் ஒருவகையில் லஞ்சம் கொடுத்ததற்கு சமம் என்று கருதும் சுபாஷின்தேர்தல் யுத்தி அவரது வார்டில் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது.
சுபாஷுக்கு மக்கள் ஓட்டுப் போட்டால் சபாஷ்தான்!












Click it and Unblock the Notifications