கிரிக்கெட்: இந்தியாவுக்கு இன்று வெற்றி கிடைக்குமா?
செஞ்சுரியன் பார்க்:
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2வது முறையாக இன்று (புதன்கிழமை) தென் ஆப்பிரிக்காவுடன்இந்தியா மோதவுள்ளது.
அப்போட்டியில் கஷ்டப்பட்டு அடித்த சதம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் கங்குலிக்கும் டெண்டுல்கருக்கும்இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்குப்பல உதாரணங்களையும் அனுபவங்களையும் அவர்கள் நேரடியாகவே பார்த்திருப்பார்கள்.
ஆனால், ரசிகர்களை இந்திய அணியினர் ஏமாற்றக் கூடாதே? மிடில் ஆர்டர் மட்டையாளர்கள் ஒழுங்காகவிளையாடவில்லை என்ற வருத்தம் கேப்டன் கங்குலிக்கு மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும்தான். எனவேஅவர்கள்தான் நிலைத்து நின்று ஆட வேண்டும்.
அதேபோல், பந்து வீச்சாளர்களும் தங்கள் திறமைகளை முழுவதுமாக உபயோகித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்.ஆனாலும், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா என்றாலே நம் அணியினர் பயந்துவிடுகின்றனர். இந்த பயத்தால் மட்டுமே பாதி தோல்வி ஏற்பட்டு விடுகிறது.
இந்த எல்லாக் குறைகளையும் களைந்துவிட்டு, இன்றாவது நம் அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாகவேண்டும். இன்றும் பகலிரவு ஆட்டம்தான் நடக்கவுள்ளது. மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி) போட்டிதுவங்கவுள்ளது.