தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் தோல்வி
டெல்லி:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க இன்று(புதன்கிழமை) பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் தோல்வியில் முடிந்தது.
காவிரி நதி நீர் இடைக்கால நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம்தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு குறிப்பிட்ட படி நீரைதிறந்துவிடவில்லை.
காவிரி டெல்டா பகுதியில் பயிர்களை பாதுகாக்க கர்நாடக உடனே காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்றுகோரி இது குறித்து விவாதிக்க காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்தது.
அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை டெல்லியில் காவிரி நதி நீர் ஆணைய தலைவரான பிரதமர் வாஜ்பாய்தலைமையில் கூட்டம் நடந்தது.
அப்போது காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற கர்நாடகம் காவிரியில் தண்ணீர்திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதை ஏற்க கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்துவிட்டார். இதையடுத்து காவிரி நதி நீர்ஆணைய கூட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.