பன்னீரின் முதல் டெல்லி பயணம் தோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்ற மாதமே நடந்திருக்க வேண்டிய காவிரி ஆணையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுஇன்று நடந்தது. ஆனால், தோல்வியைத் தழுவியது.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை தராததால் காவிரி டெல்டாபகுதியில் பயிர்கள் வாடி வருகின்றன.

பயிர்களை பாதுக்காக்க நீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை வற்புறுத்த கோரியும், இந்தபிரச்சனை குறித்து விவாதிக்கவும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும்என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கடந்த மாதம் 22ம் தேதி காவிரி நதி நீர்ஆணையம் கூட்டப்படும் என்று அறிவித்தது. டெல்லிக்குச் செல்ல ஜெயலலிதா தயாராகஇருந்தார்.

ஆனால் 19ம் தேதி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் திடீர் முதல்வரானார்.

அவர் முதல்வராக பதவியேற்றதும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்கவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். இவர் கோரிக்கையை ஏற்ற மத்தியஅரசு காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை ஒத்தி வைத்தது.

பின்னர் மீண்டும் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர்ஆணைய கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று மீண்டும் கர்நாடகம்கூறிவிட்டதால், பன்னீரில் முதல் டெல்லி பயணம் தேத்லவியில் முடிந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+