போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கைதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையிலிருந்து சென்னை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கைதி பஸ் நிலையத்தில் வைத்து போலீஸாரைஏமாற்றி விட்டுத் தப்பினார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வெள்ளை ரவி. இவர் பிரபல ரவுடி. இவரது தம்பி பாபு. இவரும்பிரபலமான ரவுடி. இந்த ரவுடி சகோதரர்களில் பாபுவை போலீஸார் பல வழக்குகள் தொடர்பாக கைது செய்துவேலூர் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
ஒரு வழக்கு தொடர்பாக பாபுவை போலீஸார் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில்ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் வேலூருக்குக் கூட்டிச் செல்வதற்காக பாரிமுனை பஸ் நிலையம் வந்தனர். அப்போதுபாபு, போலீஸாரை ஏமாற்றி விட்டு தப்பி விட்டார்.
இதையடுத்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் கைதியை கைநழுவ விட்ட 2 போலீஸாரும் புகார் செய்தனர்.இப்போது பூக்கடை போலீஸ், தப்பிய ரவுடியைத் தேடி வருகிறது.












Click it and Unblock the Notifications