மதவாதம் பற்றி கம்யூனிஸ்ட்டுகள் பேச அருகதை இல்லை - கருணாநிதி
சென்னை:
பீகாரில் ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதவாதத்தைப் பற்றிப் பேசக்கூடாதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மதவாத பாரதிய ஜனதாவை ஆதரிப்பவர் என்பதால் கருணாநிதிதான் மிகப் பெரும் சந்தர்ப்பவாதி என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்து கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். உள்ளாட்சி மன்றப் பதவிகள் மூலம்தான்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும்.
திமுகவை மதவாதக் கட்சி என்றும், சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் கம்யூனிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். பீகாரில்ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்துள்ளதை, தமிழகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.
மேலும் காவிரி நீர்ப்பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட இடைக்காலத் தீர்ப்பைசெயல்படுத்துவதற்காகத்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது தேவையற்றது என்றுஎதிர்த்தவர்கள், இன்று அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
இன்று கூடிய காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications