புலிகள் தாக்குதலில் 4 இலங்கை விமானப்படையினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடந்த சண்டையில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 4பேரைவிடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
திரிகோணமலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விமானப் படைத்தளத்தின் மீது நேற்று நள்ளிரவுவிடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள எங்கள் விமானப் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டை4 மணி நேரம் நீடித்தது.
இதில் 4 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால்விடுதலைப்புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புப் பற்றித் தகவல் இல்லை.
இந்தச் சண்டை குறித்துத் தகவல் வந்தததும் அந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications