கருணாநிதிதான் மிகப் பெரும் சந்தர்ப்பவாதி - நல்லக்கண்ணு
சென்னை:
கருணாநிதிதான் பெரிய சந்தர்ப்பவாதி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணுகூறினார்.
மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை மாற்றிக் கொண்டுசந்தர்ப்பவாத அரசியல் செய்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்குப் பதிலளித்து நல்லக்கண்ணுகூறுகையில்,
கருணாநிதி கம்யூனிஸ்ட்களை சந்தர்ப்பவாதிகள் என்று கூறிவருகிறார். உண்மையில் அவர்தான் பெரியசந்தர்ப்பவாதி.
அவர் தனக்கு நன்மை விளைவிப்பதாக இருந்ததால் அதற்காக தனது கட்சியின் கொள்கைகளை எப்படிவேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்.
கடந்த 1998ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாரதிய ஜனதாக் கட்சியை ஆக்டோபஸ் (எட்டு முகங்களைக்கொண்ட ஒரு பிராணி ) என்று வர்ணித்தார். ஆனால் ஒரே வருடத்தில் அதே பா.ஜ.கவுடன் கூட்டணிசேர்ந்துகொண்டார். இது சந்தர்ப்பவாதமில்லையா?
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக அளவில் இடங்களை கருணாநிதிவழங்கியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜக வளர அவரும் ஒரு காரணமாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டுப் பிரிந்தது, மதசார்பற்ற கூட்டணியின்வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் என்றார் நல்லக்கண்ணு.