ஊட்டி லாரி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பன்னீர் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பொம்மன் எஸ்டேட் பகுதியில் லாரி மலைப் பள்ளத்தில் உருண்டுவிழுந்ததில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில் 5பெண்கள் உள்பட 6 பேர் இறந்தனர். 11 பேர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் தவிர படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலாரூ.15,000ம், லேசானா காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 நிதியும் வழங்கப்படுவதாக முதல்வர்பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications