For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகம் மதிக்க வேண்டும் - கருணாநிதி
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை மதித்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கருகும் பயிர்களின் நிலைமையை உணர்ந்துதான் கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்என்று பிரதமர் கூறியுள்ளார். இதை மதித்து கர்நாடக அரசு தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்.
தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு தண்ணீரைத்திறக்காவிட்டால் இந்த வழக்கு மேலும் வலுப்பெறும். அதுபோன்ற நிலையை கர்நாடக அரசு உருவாக்கிக் கொள்ளவேண்டாம்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
Comments
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]