ஓசூரில் சாலை மறியல் செய்த திமுக எம்.பி. உட்பட 11 பேர் கைது
ஓசூர்:
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.மேலும் வெற்றிச் செல்வன் எம்.பி. உள்ளிட்ட 11 பேரை கைதுசெய்தனர்.
ஓசூர் நகராட்சித் தலைவர் பதவிக் திமுக சார்பில் போட்டியிடும் நாகராஜ் என்பவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யகிருஷ்ணகிரி திமுக எம்.பி. வெற்றிச் செல்வன் நேற்று (வியாழக்கிழமை) ஓசூர் வந்தார்.
அப்போது திமுக பிரச்சார வேன் ஒன்று நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறுஏற்படுத்துவதாகக் கூறி, அந்த வேனை ஓசூர் ஏ.எஸ்.பி.அவிபிரகாஷ் சின்ஹா போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெற்றிச்செல்வன் ஏ.எஸ்.பியிடம் பேசி பிரச்சார வாகனத்தை விடுவிக்க வேண்டும்என்று கூறினார். ஆனால் அதற்கு ஏ.எஸ்.பி.மறுத்துவிட்டார்.
இதனால் வெறுப்படைந்த திமுகவினர் வெற்றிச் செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.எஸ்.பி., ஒருபெரும் போலீஸ் படையுடன் வந்து தேசிய நெடுஞ்சாலை என்பதால்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் சாலை மறியலைக் கைவிடும்படியும் கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர்கள் கைவிட மறுத்துவிட்டனர்.
பிறகு போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் மீது தடியடி நடத்தினர். மேலும் வெற்றிச் செல்வன் எம்.பி.,நாகராஜ் உள்ளிட்ட 11 பேரை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்குச்சென்றுவிட்டனர்.
பின்னர் இரவு 9.45 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications