ஹைதராபாத்தில் முஸ்லீம்கள் வன்முறை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து, ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில்முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரத்திலேயே இந்தப் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தை அடக்க முயன்ற போலீசார் மீதே கற்களை வீச ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள். இதையடுத்துபோலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைத் தெளித்தும் போராட்டக்காரர்களைத் கலைத்தனர்.
நிலைமை எல்லை மீறவே போலீசார் தடியடித் தாக்குதலைத் தொடங்கினர். இதையடுத்து பெரும் கலவரம்வெடித்தது. இச்சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 2 உயர் போலீஸ் அதிகாரிகளும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் அடக்கம்.












Click it and Unblock the Notifications