For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கான் போரில் இந்தியா பங்கேற்காது - ஜஸ்வந்த்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆப்கானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போரில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய வெளியுறவு மற்றும்ராணுவத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.

டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) ஆப்கான் போரில் இந்தியாவின் நிலை குறித்து ஜஸ்வந்த் சிங்நிருபர்களுக்குப் பட்ேடியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்கான் மக்களுக்கு இந்தியா சார்பில் 10 லட்சம் டன் கோதுமை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மேலும்கூடாரங்கள், கம்பளி, போர்வை போன்றவையும் வழங்கப்படும்.

இதுதவிர இந்தியாவுக்கு வரவிரும்பும் இந்து, சீக்கிய மதத்தினருக்கு உடனுக்குடன் விசா வழங்கும்படிபாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஆப்கானில் பல்வேறு இனத்தவரும் சேர்ந்த பொதுவான அர அமைவதை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால்நார்தர்ன் அல்லயன்சுக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது என்று பாகிஸ்தான் நம்முடன் பேசவிரும்புகிறது.

ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி கவிழ்வதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்புதலிபான்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 ஹெலிகாப்டர்களை மீண்டும் அவர்களிடமே வழங்கிவிட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் போரில் இந்தியா பங்கேற்காது. மேலும் எதிர்காலத்திலும் பங்கேற்கவாய்ப்பும் இல்லை. ஆப்கானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களைக் கண்டறிந்து அமெரிக்கப் படைகள்அவற்றை அழித்துவருகின்றன. இது இந்தியாவுக்கு நல்லது.

மேலும் இப்போதைக்கு நான் பாகிஸ்தான் செல்லும் திட்டம் இல்லை என்று கூறினார் ஜஸ்வந்த் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X