புலிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் கடந்த வாரம் அமெரிக்காவால் சேர்க்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைக் கைவிட்டால், அமெரிக்காவின் பட்டியலிலிருந்து அவர்கள்பெயர் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
உலக மனித உரிமை இயக்கமான அம்னெஸ்டி இன்டர்நேஷனலும் விடுதலைப் புலிகளை எச்சரித்துள்ளது.முக்கியமாக சிறுவர்களுக்கு விடுதலைப்புலிகள் போர்ப் பயிற்சி அளிப்பதை அது கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதற்கிடையே, வடகிழக்கு இலங்கையில் ராணுவத்தின் கபிர் ரக ஜெட் விமானங்கள் தாக்கியதில் புலிகளின் படகுஒன்று வெடித்துச் சிதறியது. மற்றொரு படகு பலத்த சேதமடைந்தது. மேலும் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 2 அரசுஉயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications