பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் - இந்தியா எதிர்ப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் வழங்கினால் அதை இந்தியா எதிர்க்கும்என்றுஅமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மான்சிங் கூறினார்.
மேலும், ஆயுத உதவிகளும் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் எதிர்பார்க்கும் என்று கூறப்படுகிறது.அவ்வாறு ஆயுத உதவிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும் என்றுமான்சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆப்கானில் உள்ள தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றவும், பின் லேடனைப் பிடிக்கவும் அமெரிக்காவுக்குபாகிஸ்தான் அளிக்கும் உதவிகள் குறிப்பிடத்தக்கதுதான்.
இதனால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தாராளமாக நிதியுதவிசெய்து வருகிறது. ஆனால் இதையும் தாண்டி ஆயுதஉதவிகளும் பாகிஸ்தானுக்குச் செய்யப்படுமானால் அதை இந்தியா எதிர்க்கும்.
ஏனென்றால் பாகிஸ்தான் வாங்கும் ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்போகிறது என்பது உலகம் அறியும்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் பொறுத்தவரை அவர், சர்வதேச தீவிரவாதத்தையும், பிராந்தியத் தீவிரவாதத்தையும்தனித்தனியாகப் பிரித்துக் கூறவில்லை. உலகத்தில் தீவிரவாதம் எந்தமூலையில் இருந்தாலும் அதுஅழிக்கப்படவேண்டும் என்றுதான் கூறியுள்ளார்.
இதைத்தான் அவர் இந்தியப் பிரதமர் வாஜ்பாயிடமும் கூறியுள்ளார். மேலும் தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம்,கெட்ட தீவிரவாதம் என்று அவர் நினைக்கவில்லை.
இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதம் எங்கிருந்தாலும் அதை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாகஇருக்கின்றன என்று மான்சிங் கூறினார்.