ஆப்கானிஸ்தானில் நுழையும் நிருபர்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்:
முறையான அனுமதி இல்லாமலும் சரியான அடையாள அட்டை இல்லாமலும் ஆப்கானிஸ்தானில் நுழையமுயற்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான்எச்சரித்துள்ளது.
தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு துணிச்சலாகச் சென்று செய்தி சேகரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, முஸ்லீம் பெண்களைப் போல "புர்கா" அணிந்து கொண்டு, சில நிருபர்கள் ஆப்கானிஸ்தானுக்குள்நுழைந்து, தலிபான்களிடம் மாட்டிக் கொண்டனர்.
10 நாட்களுக்கு முன்னர்தான் யுவோன் ரிட்லே என்ற இங்கிலாந்து நிருபர், தலிபான்களின் கையில் சிக்கிக்கொண்டு, பின்னர் ஒரு வழியாக விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கடந்த வாரம் தாக்குதல் ஆரம்பித்த பிறகு மைக்கேல் பேரர்டு என்ற பிரெஞ்ச் நிருபரும், வேறு 2பாகிஸ்தானிய நிருபர்களுடன் தலிபான்களிடம் மாட்டிக் கொண்டனர்.
அந்தப் பிரெஞ்ச் நிருபர் இன்னும் தலிபான் கைகளில் மாட்டிக் கொண்டு அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறார்.அவருககு "ஒற்றர்" முத்திரை குத்தியுள்ள தலிபான்கள், இப்போதைக்கு அவரை விடுவிக்கப் போவதில்லை என்றும்கூறியுள்ளனர்.
இதையடுத்துதான், பாகிஸ்தான் தற்போது நிருபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications