பாமகவுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி?
டெல்லி:
நாளை (திங்கள்கிழமை) விரிவாக்கப்பட இருக்கும் மத்திய அமச்சரவையில்பா.ம.கவுக்கும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் திட்டக்கமிஷன் துணை தலைவராக இருந்துவரும் கே.சி பந்த் பாதுகாப்பு துறைஅமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திரணாமுல்காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
ஷாநாவாஸ் ஹுசைன் வகித்து வரும் விமானத்துறை, சுஷ்மா ஸ்வராஜ் வகித்து வரும்செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகிய துறைகள் வேறொருவருக்கு மாற்றப்பட்டுஇவர்களுக்கு வேறு துறைகள் கொடுக்கபடும் என்றும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்நிகழ்ச்சியில் 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் அதிகாரிகள்கூறினர்.












Click it and Unblock the Notifications