For Daily Alerts
Just In
துப்பாக்கி ஏந்திய போலீசுடன் சென்ற விமானம்
மும்பை:
மும்பை-டெல்லி அலையனஸ் விமானத்தை (சி.டி. 7444) கடத்தப்போவதாக வந்ததகவலையடுத்து விமானம் முழு சோதனக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிறகுவிமானம் 3 ஸ்கை மார்ஷல்கள் (துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள்)பாதுகாப்புடன் தாமதமாக டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் விமானத்தில் முழு சோதனை நடத்தப்பட்டது. அனைத்துபயணிகளும் கடும் சேதனைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்களது பொருட்களும்சோதனை செய்யப்பட்டது.
பின்னர் 3 ஸ்கை மார்ஷல்களின் பாதுகாப்புடன் இந்த விமா-னம் 20 நிமிடம் தாமதாகபுறப்பட்டு சென்றது. இந்த விமானம் பத்திரமாக டெல்லி சென்றடைந்தது.
இந்த விமானத்தில் 2 குழந்தைகள், 6 விமான பணியாளர்கள் உட்பட 84 பேர்பயணிகள் பயணம் செய்தனர்.
சம்பவத்தையடுத்து மும்பை விமான நிலையம் முழுவதும் சோதனைக்குஉட்படுத்தப்படுத்தப்பட்டது.
Comments
Story first published: Sunday, October 14, 2001, 5:30 [IST]