For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி ஏந்திய போலீசுடன் சென்ற விமானம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பை-டெல்லி அலையனஸ் விமானத்தை (சி.டி. 7444) கடத்தப்போவதாக வந்ததகவலையடுத்து விமானம் முழு சோதனக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிறகுவிமானம் 3 ஸ்கை மார்ஷல்கள் (துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள்)பாதுகாப்புடன் தாமதமாக டெல்லி புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சனிக்கிழமை இரவு 11மணிக்கு டெல்லி செல்லத் தயாராக இருந்த போயிங் 737 விமானத்தை கடத்தப்போவதாக ஒரு மர்ம நபர் டெல்லி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம்கூறினார்.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் விமானத்தில் முழு சோதனை நடத்தப்பட்டது. அனைத்துபயணிகளும் கடும் சேதனைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்களது பொருட்களும்சோதனை செய்யப்பட்டது.

பின்னர் 3 ஸ்கை மார்ஷல்களின் பாதுகாப்புடன் இந்த விமா-னம் 20 நிமிடம் தாமதாகபுறப்பட்டு சென்றது. இந்த விமானம் பத்திரமாக டெல்லி சென்றடைந்தது.

இந்த விமானத்தில் 2 குழந்தைகள், 6 விமான பணியாளர்கள் உட்பட 84 பேர்பயணிகள் பயணம் செய்தனர்.

சம்பவத்தையடுத்து மும்பை விமான நிலையம் முழுவதும் சோதனைக்குஉட்படுத்தப்படுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X