அரபு நாடுகளைவிட்டு அமெரிக்கர்கள் வெளியேற அல்-கொய்தா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ:

அமெரிக்க படைகளும், பிரிட்டன் படைகளும், பிற அமெரிக்கர்களும் உடனடியாகஅரேபியா வளைகுடாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஒசாமா பின் லேடன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 7ம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் ஒசாமா பின் லேடனின் அல் கொய்தா அமைப்பின் செய்தி தொடர்பாளர்சுலைமான் அல் ஜஸீரா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அமெரிக்கபடைகளும்,பிரிட்டன் படைகளும் உடனடியாக அரேபியா வளைகுடாபகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.

அமெரிக்க மக்களும், பிரிட்டன் மக்களும் விமானத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும். அல்கொய்தா அமைப்பு ஒன்றை சொன்னால் அதை செய்து காட்டும்.

ஆப்கானிஸ்தான் மீது தொடுத்துள்ள போரில் அமெரிக்கா தோல்வியுற்றுதிரும்பும்வரை விமானங்களை கடத்தி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்.நாங்கள் சொன்னதை செய்து காட்டுவோம்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது தந்தை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்பில் கிளிண்டன், இஸ்ரேல் பிரகமர் எரியல் ஷரோன் ஆகியோர் லட்சக்கணக்கானமுஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தலைவர்கள் யூதர்களின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் தண்டனையிலிருந்துதப்ப முடியாது.

லட்சகணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் எந்தவிதமானதவறும் செய்யாமல் பல அமெரிக்க தாக்குல்களால் இறந்துள்ளனர். அவர்கள் சிந்தியரத்தம் வீணாகாது. இதற்கு காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாதுஎன்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+