விழுப்புரம் அருகே பஸ்-வேன் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வேன் ஒன்றும் அரசு பேருந்து ஒன்றும் செவ்வாய்க்கிழமை (இன்று) நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை வேன் ஒன்று சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சமயம் எதிர்திசையில் அரசு பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
இரண்டு வாகனங்களும் வேகமாக வந்து கொண்டிருந்தன. விழுப்புரம் அருகேயுள்ள வண்டிப்பாளையம் என்றஇடத்தில் வந்து கொண்டிருந்தபோது வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தில் வேன் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications