முதல்கட்ட தேர்தலில் 60 சதவிகித வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை (இன்று) நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவிகிதத்திற்கு மேல்வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
சென்னையில் காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு பிற்பகலின்போது சூடு பிடித்தது.
குறிப்பாக திமுகவினரின் பகுதிகள் என கருதப்படும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், திருவெற்றியூர்,அண்ணா நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்கள் கூட்டம்அதிகமாக இருந்தது.
பல பகுதிகளில் கலாட்டாக்களும், வன்முறைகளும் நடந்ததால், சென்னையில் பொதுவாக வாக்குப் பதிவுகுறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை அருகே உள்ள மீஞ்சூர்-காட்டுப்பள்ளி என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியைக்கைப்பற்ற 30 பேர் கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
ஆனால், அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் அதிகாரியும் பிற ஊழியர்களும் அதன் கதவுகளை மூடிவிட்டு பின்பக்கமாகச் சென்று தப்பி விட்டனர்.
சென்னை-அண்ணாநகரில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில் ஒருவருக்குக் கத்திக் குத்து விழுந்தது. அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் புரசைவாக்கம், ஜாபர்கான்பேட்டை, திருவான்மியூர், கோபாலபுரம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பரவலாககள்ள ஓட்டுப் போடுதல், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் ஆகியவை நடந்தன.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க வராததால், இங்கும் வாக்குப் பதிவுகுறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications