இந்தியத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தரப்பட்ட தண்டனை
டெல்லி:
பாகிஸ்தான் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் அந் நாட்டுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும் எனபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
நேற்று இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 30 தீவிரவாதிகளை ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் சுட்டுவீழ்த்தினர். பாகிஸ்தானின் 11 கண்காணிப்புக் கூடாரங்களையும் பதுங்கு குழிகளையும் தாக்கி அழித்துள்ளோம்.
ஊடுருவல்காரர்களை மனிதாபிமானமே இல்லாமல் தாக்க ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியப் படைகள் மீது துப்பாக்கிகள் மட்டுமின்றி விமான எதிர்ப்பு பீரங்கிகள், கிரனைடுகள், மார்ட்டர்துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டும் இந்தியப் படைகள் தாக்கின.
பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்களில் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அந் நாட்டு ராணுவம் பயிற்சிஅளித்து வருகிறது. வெளியில் தான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவுவதாக வசனம் பேசி வருகிறதுபாகிஸ்தான்.
இந்த முகாம்கள் மீது இந்தியா தாக்குமா என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. தேவையானநடவடிக்கையை ராணுவம் எடுக்கும்.