நாளை சென்னை வருகிறார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகபிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை (நாளை) மாலை சென்னை வருகிறார்.
இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஆலோசிக்க டெல்லியிலிருந்து மத்திய அரசு அதிகாரிகள் சென்னை வந்தனர்.
விமான நிலையம் முழுவதையும் சுற்றிப் பார்த்த அவர்கள், பாதுகாப்பு விவரங்களைக் கேட்டறிந்தனர். மேலும்விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடனும் அவர்கள் பாதுகாப்பு குறித்துஆலோசனை நடத்தினர்.
வியாழக்கிழமை ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகளுடைய திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையேடெல்லி திரும்புகிறார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications