காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறோம் - பாவல்
டெல்லி:
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தையும் சேர்த்துதான் அமெரிக்கா எதிர்த்து தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் காலின் பாவல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடையது. அந்த 2 நாடுகளும் சேர்ந்துதான் இந்தப் பிரச்சனைக்குத்தீர்வு காண வேண்டும் என்றும் பாவல் கூறினார்.
சர்வதேசத் தீவிரவாதி பெரிய முஸ்லீம் தலைவர் கிடையாது. அவன் ஒரு கொலையாளி. அவனைக் கண்டுபிடித்துத்தண்டிக்க வேண்டியது எங்கள் கடமை என்று பாவல் தெரிவித்தார்.
வாஜ்பாயை அமெரிக்காவிற்கு வருமாறு பாவல் அழைத்ததாகவும் அந்த அழைப்பை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டதாகவும் பாவல் கூறினார்.
இதையடுத்து, வாஜ்பாய் அடுத்த மாதம் 9ம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள்தெரிவித்தன. நவம்பர் 4ம் தேதி ரஷ்யாவுக்குச் செல்லும் வாஜ்பாய் அப்படியே அமெரிக்கா செல்வார் என்றும்கூறப்படுகிறது.