எல்லையில் பாகிஸ்தான் பயங்கர துப்பாக்கிச் சூடு
ஜம்மூ:
ஜம்மூ-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தொடர்ந்து கடும்துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
சர்வதேச எல்லையின் அருகே உள்ள அக்னூர் பகுதியில் இத் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால்,இந்தியத் தரப்பில் எந்த உயிர்ச் சேதமும் இல்லை.
அதே நேரத்திஸ் இந்தியப் படைகள் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் எல்லைப் பகுதியில் இந்தியா தனது படைகளைக் குவித்து வருவதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது.இந்தியப் பகுதியில் அதிக அளவிலான படை நடமாட்டம் இருப்பதாகவும், எந்தவிதமான தாக்குதலையும் சந்திக்கத்தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறினார்.
ஆனால், இதை பாகிஸ்தானின் வழக்கமான புலம்பல் என இந்தியா கூறியுள்ளது. பனிக்காலம் தொடங்குவதால்எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகம் இருக்கும் என்பதால் படைகளை அதிகப்படுத்துவதுவழக்கமாக ஆண்டுதோறும் நடந்து வரும் சம்பவம் தான். இது பாகிஸ்தானுக்கும் தெரியும். இருந்தாலும் இதைபெரிதுபடுத்த பாகிஸ்தான் முயல்கிறது என இந்தியா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications