ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்த 10 இந்தியர்கள்
டெல்லி:
அமெரிக்க விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பிய 10 ஆப்கான் வாழ் இந்தியர்கள், பத்திரமாக இந்தியாவந்து சேர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் இல்லாததால், அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்துதான் விசா பெற வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் அதற்குள் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத் வழியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு வருவதற்கு முன்அவர்கள் ஒரு மலையில் கால்நடையாகவே ஏறி இறங்கியுள்ளனர். இதற்கு 3 மணி நேரம் ஆனதாம்.
ஆனால் பாகிஸ்தான் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டது. பிறகு ஒரு வழியாக பாஸ்போர்ட்,விசாக்களைக் காட்டிய பிறகு பாகிஸ்தானுக்குள் வந்தனர்.
இஸ்லாமாபாத்துக்கு அருகில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் தங்குவதற்கு அனுமதி பெற்ற பின், பாகிஸ்தானில்உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா உடனடியாகக் கிடைத்து விட்டது.
கடவுள் அருளால் நாங்கள் தப்பித்துப் பிழைத்து வந்துள்ளோம் என்று கூறும் இவர்கள், ஆப்கானிஸ்தானில்இன்னும் 1,500 இந்தியர்கள் இருப்பதாகவும், 400 பேர் பாகிஸ்தான் வருவதற்கான விசாவுக்காகக் காத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications