இந்தியாவைத் தாக்குவோம்: ஜெய்ஷ்-ஏ-முகம்மத் எச்சரிக்கை
காஷ்மீர்:
இந்தியா முழுவதும் தற்கொலைப் படையினரைக் கொண்டு தாக்குதல் நடத்தப் போவதாக ஜெய்ஷ்-ஏ-முகம்மத்எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு தான் காஷ்மீர் சட்டசபை மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 41 பேரைக் கான்றது. இதன்தலைவர் மெளலான மசூத் அஸாரை விடுவிக்கக் கோரி தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகள் காண்டஹாருக்குக் கடத்திச் சென்றனர்.
இரு தினங்களுக்கு முன் லர்ஷர்-ஏ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாகஎச்சரித்தது. இந் நிலையில் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பும் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்தியா தீவிரமாகஎடுத்துக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் அந் நாட்டு ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்தியா தாக்கியது. இதில்பதுங்கியிருந்த 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்துத் தான் இந்தியாவைத் தாக்கப் போவதாக இந்த தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீர் மீதுதாக்குதலை அதிகரித்துள்ளது. பொது மக்களை சுட்டு வருகிறது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக வி.எச்.பி. அறிவித்துள்ளது. இதைக் கண்டித்துத் தான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவின் நெருக்குதலையடுத்து இந்த அமைப்பை அமெரிக்கா தடை செய்தது. இதையடுத்து இந்தஅமைப்பின் பெயரை தரீக்-உல்-புர்கான் என அதன் தலைவர் மாற்றிவிட்டார். ஆனால், இதை அந்த அமைப்புவெளியில் மறுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications