For Daily Alerts
Just In
பாகிஸ்தானுடன் "நோ" பேச்சு வார்த்தை: வாஜ்பாய்
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
இதற்கிடையே திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் துருப்புக்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது.இச்சம்பவத்தின்போது, எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் புதன்கிழமை (நேற்று) இரவு பிரதமர் வாஜ்பாயுடன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போதுதான், இப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்த இந்தியா தயாராக இல்லை என்றுமுஷாரப்பிடம் வாஜ்பாய் கூறிவிட்டார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியா ஏற்கனவேகூறிவந்துள்ளது.
Comments
Story first published: Thursday, October 18, 2001, 5:30 [IST]