For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடிதத்தில் வரும் எமன்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

ஊதா நிற கவர்களில் உங்களுக்கு கடிதம் வந்தால் அதை திறக்கும் முன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அவைஉயிர்க் கொல்லி வைரஸ்களை ஏந்தி வரும் எமன்கள்.

கிளிங்ஜெர்மன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் பெயரில் அந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. அமெரிக்கா,கனடாவில் பலருக்கு இந்தக் கடிதங்கள் வந்துள்ளன.

இப்போது இந்தியாவிலும் பலருக்கு இந்தக் கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இந்தக் கடிதங்கள் நல்ல செய்தி ஏதும் கொண்டு வருவதில்லை, அவை ஏந்தி வருவது வைரஸ்களை.

உங்களுக்கு கிளிங்ஜெர்மன் பவுண்டேஷனில் வழங்கும் பரிசு இது என்ற கொட்டை எழுத்துக்களுடன் இந்தகடிதங்கள் வருகின்றன. இந்தக் கடிதத்தைப் பிரித்தால் அதில், ஒரு பிளாஸ்டிக் கவரில் பஞ்சு இருக்கும்.அதிலிருந்து அருமையான வாசனை வீசும்.

அந்தப் பஞ்சை உங்கள் மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தால், சில கோடி உயிர்க் கொல்லி வைரஸ்கள் உங்கள்உடலுக்குள் நுழைந்துவிட்டன என்று அர்த்தம். சிறிது நேரத்தில் வயிற்றுப் போக்கு ஆரம்பித்துவிடும். மரணமும்உறுதி.

இந்த வைரஸ்கள் அடையாளம் காண முடியாமல் விஞ்ஞானிகள் திண்டாடி வருகின்றனர். இதற்கு இப்போதைக்குகிளிங்ஜெர்மன் வைரஸ் என்று தான் பெயர் வைத்துள்ளனர்.

இந்த வைரஸை முகர்ந்த சில மணி நேரங்களிலேயே வயிற்றுப் போக்கு ஆரம்பித்து விடுகிறது. அது நிற்பதுஇல்லை. அடுத்த சில நாட்களில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டுவிடுகிறது.

இதுவரை அமெரிக்கா, கனடாவில் 23 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இறந்துள்ளனர்.

கிளிங்ஜெர்மன் பவுண்டேசனில் இருந்து என்று அச்சிடப்பட்டு எந்த தபால் வந்தாலும் பிரிக்காதீர்கள்... உடனே,அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அப்புறப்படுத்துங்கள். முடிந்தால் எரித்துவிடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X